visitors

Tuesday, February 19, 2013

வாசிப்பு கலையும் புத்தகம் எனும் பொக்கிஷமும்

  நேற்று ஒரு புத்தக கடைக்கு சென்றிருந்தேன். நான் புத்தகம் வாங்க சென்ற நேரம் மலை 4 மணி இருக்கும். 4 குழந்தைகள் , அனைவரும் பள்ளி குழந்தைகள், அதனுடைய அப்பாவாக இருக்கும் அவருடன் நின்றிருந்தனர். அவர் என்ன வேண்டுமோ  வங்கி கொள்ளுங்கள் என்றவுடன், ஒரு குழந்தை ஜாமெட்ரி பாக்ஸ் வேணும் எங்க, மற்ற அனைவரும் அதையே கேட்டனர், மற்றொரு குழந்தை ஸ்கேல் வேணும் எங்க மற்ற குழந்தைகளும் அதையே கேட்டனர், ஒரு குழந்தை பென்சில் என்று சொல்லும்போதே அந்த கிராமத்து ஆசாமி 4 கொடுத்துவிடுங்கள் என்றார், ஒரு குழந்தை ரப்பர் என்க , அதுவும் 4 என்றார். எனக்கு என்ன தோன்றியது என்றால். அவர் ஒரு விவசாயி, நிலத்தில் பருத்தியோ, மொச்சகொட்டையோ பயிரிட்டு இருந்திருக்கிறார், தன வீட்டு குழந்தைகள் பள்ளி செல்லும்போது தேவையானவற்றை கேட்டு நச்சரிதிருக்கும். அப்போதெல்லாம் பருத்தி விற்றுவிட்டு வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருப்பார். இப்பொழுது விற்றவுடன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு புத்தக கடைக்கு வந்துவிட்டார்.
விவசாயி வாழ்கையே அதுதானே. கடன் வாங்கி நிலத்தில் பயிரிடுவார், அதனை தான் விற்க நினைக்கும் விளைக்கும் விற்க முடியாது, கிடைக்கும் கொஞ்ச பணத்தில் குடும்பத்தையும் கடத்துவார்.
எனக்கு அந்த கடையை பார்த்தவுடன் இந்த நினைவுகளை தவிர்க்க முடியவில்லை. காரணம் என் வாழ்க்கையும் அதுபோல்தான்.
நான் துவக்க பள்ளியில் படித்துகொண்டிருந்த சமயம். 2வது முடிந்து 3ம் வகுப்பிற்கு செல்கிறேன், புத்தகம் இல்லை, இப்பொழுதுபோல் அன்று பள்ளி துவங்கும் சமயத்திலேயே புக் கொடிக்கமாட்டர்கள். ஒரு மதமோ இரண்டு மதமோ ஆகும். அதுவரை நமது சீனியர் மனவர்களிடமோ அல்லது கடையிலோ வங்கிதான் படிக்க வேண்டும். நான் எனது அப்பாவை புத்தகம் கேட்டு நச்சரிதிருக்கிறேன், என் அப்பாவும் இதிபோலவே ஓமலூர் கடைக்கு என்னை அழைத்து சென்றிருக்கிறார். அப்பொழுது பஸ் ஏறி வெளியூர் செல்வது என்றால் அபூர்வம். நானும் சம்தொசமாக சென்றிருக்கிறேன். கடையில் ஒரு தமிழ் புக் வங்கி கொடுத்திருக்கிறார். அவர் புத்தகத்திற்கான காசை கொடுத்திவிட்டு திரும்பி பார்த்திருக்கிறார், அங்கே நான் இல்லை. பார்த்தல் அங்கே நாடு பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து சதம் போட்டு படிதுகொண்டிருந்தேனாம்.
ஆம், புக் கையில் கிடைத்த சந்தோஷத்தில் உடனே படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் உட்கார இடம் தேடி இருக்கிறேன். நாடு பஸ் சட்டத் என்று கூட பார்க்காமல் உண்மையில் எனக்கு தெரியது என்பதால், பஸ் வந்து நிற்கும் அந்த இடத்தில உக்கார்து வாய்விட்டு சத்தமாக படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
திரும்பி பார்த்த எனது அப்பாவிற்கு ஒரே பயம், என்னை சுற்றி நிறைய கூட்டம். என் தந்தைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது அவர்கள் திட்டுவார்களோ என்று பயந்துகொண்டே தயங்கியபடி என் அருகில் வந்திருக்கிறார். கூட்டத்தில் ஒரு ஆள் யார் இது என்று கேட்க என் தந்தை தயங்கியபடியே என் குழந்தை என்று சொல்ல,அவர். இந்த குழந்தையின் படிப்பை எந்த சூழ்நிலையிலும் பாதியில் நிறுத்தி விடாதே, எந்த சூழல் வந்தாலும் நிருதிவிடதே என்று சொன்னாராம். அந்த ஒரே காரணதிர்காகதன்ன் உன்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்தேன்  என்று என் தந்தை என்னிடம் சமீபத்தில் கூறினார். ஆம் நானும் இதோ P h D வரை வந்துவிட்டேன்.
சமீபத்தில் என் தந்தை எண்ணிடல் பகிர்ந்துகொண்டது 

No comments:

Post a Comment