visitors

Wednesday, January 30, 2013

இறந்தவர்கள் பொய் சொல்வதில்லை

இறந்தவர்கள் பொய் சொல்வதில்லை என்று அகிரா குரசேவாவின் ரோஷமானில் ஒரு வசனம் இடம் பெறுகிறது, அது பொய் என்பதை இறந்த பலர் இன்றுவரை உறுதி செய்து கொண்டேயிருக்கிறார்கள். வரலாற்றில் பாதி இறந்தவர்கள் சொல்லும் பொய்கள் தானே,
சாமான்ய மனிதனின் மரணம் உலகின் கண்களைப் பொறுத்தவரை ஒரு சம்பவம், ஒரு இலை உதிரல், அவ்வளவே,
மகாபாரத்தில் யட்சன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல வந்த யுதிஷ்ட்ரன் உயிரினங்கள் தினந்தோறும் இறந்து கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்களே – அதுதான் ஆச்சரியம் என்கிறான்,  அந்தப் பதிலை சொல்லும் போது யுதிஷ்டரன் மனம் ஒரு நிமிசம் மரணத்தைப் பற்றி யோசித்து தானே கடந்து வந்திருக்கும்,
மரணம் ஆச்சரியமானதிற்கான முக்கியக் காரணம், சாவு என்பது நமக்கு ஒரு சொல், ஒரு துண்டித்தல், ஒரு உதிர்தல், காலத்திலிருந்து அகாலத்திற்குள் செல்லும் பயணம், விடைபெறல் அவ்வளவே.
 .
.
.
.
அம்மாவின் சாவிற்கு வந்த மகள் அனுசுயா திடீரென ஒரு முறை தாயை முத்தமிடுகிறாள், இதுவரை பெற்ற முத்தங்களுக்கான விடைபெறல் போலவே அந்த முத்தம் அடையாளப்படுத்தபடுகிறது


from valkaiyin vesam by s. ramakrishnan.

No comments:

Post a Comment